Header Ads



ஒரு நாட்டின் சட்டம் அல்லது சுற்றறிக்கை அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் - சாணக்கியன்


கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனை சுகாதார ஊழியர்களின் சீருடை தொடர்பான பிரச்சினை, சமூகங்களுக்கிடையில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் மாற்றப்பட்டதாக சாணக்கியன் கவலை வெளியிட்டுள்ளார். விழுதுகள் நிகழ்ச்சியில் இன்று (22) கலந்துகொண்ட  அவர் இதனை தெரிவித்தார்.


குறித்த நிலைமையை சீர்செய்யும் வகையில், சுகாதார அமைச்சரினால் தற்காலிக தீர்வாக ஒரு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட போதிலும், அதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். அரச நிறுவனங்களில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஆடைக் கட்டுப்பாடு தொடர்பான சுற்றறிக்கைகளை சுகாதார அமைச்சின் சுற்றறிக்கைகள் மூலம் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.


ஒரு நாட்டின் சட்டம் அல்லது சுற்றறிக்கை அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்றும், அதனை நிறுவனத் தலைவர்கள் தன்னிச்சையாக மாற்றியமைக்க முடியாது.  தற்காலிக தீர்வாக பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்கள் அருகிலுள்ள வேறு மருத்துவமனைக்கு இணைக்கப்பட்டுள்ளனர்.


இந்த விவகாரம் தொடர்பில் சுகாதார அமைச்சு, நாடாளுமன்ற பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடி, சீருடை ஒழுங்குமுறைகளில் திருத்தங்களை மேற்கொண்டு நிரந்தர தீர்வைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருவதாக சாணக்கியன் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.