இலங்கையில் இருந்த ஒரேயொரு, ஒட்டகச் சிவிங்கியும் விடைபெற்றது
தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் வாழ்ந்து வந்த ஒரேயொரு ஒட்டகச்சிவிங்கியும் உயிரிழந்துள்ளதாக தேசிய தேசிய மிருகக்காட்சி சாலைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஆர். சி. ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று (18) இரவு உயிரிழந்த இந்த பெண் ஒட்டகச்சிவிங்கியின் வயது சுமார் முப்பதாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழப்பதற்கு முன்னர் இந்த ஒட்டகச்சிவிங்கிக்கு எவ்வித நோய்களுக்குமான அறிகுறிகளும் தென்படவில்லை எனவும், முதுமை காரணமாக ஏற்பட்ட இயற்கையான சூழ்நிலையே இந்த இறப்புக்குக் காரணம் என அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காடுகளில் வாழும் ஒட்டகச்சிவிங்கிகளின் சராசரி ஆயுட்காலம் 20 முதல் 25 ஆண்டுகள் வரை மட்டுமே ஆகும் என்றும், மிருகக்காட்சி சாலைகளில் உள்ள சூழலில் அவைகளால் அதைவிடக் கூடுதல் காலம் வாழ முடியும் என்றும் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment