அடுத்த ஜனாதிபதி சஜித், எதிர்க்கட்சித் தலைவர் பதவியையாவது நாமல் கைப்பற்ற வேண்டும்
தற்போதைய ஆட்சியில் விரக்தியடைந்துள்ள மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்துள்ளனர். எனவே நாட்டின் அடுத்த ஜனாதிபதி சஜித் பிரேமதாசவே ஆவார். அதன்போது, பொதுஜன பெரமுனவின் நாமல் ராஜபக்ஷ முடிந்தளவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியையாவது கைப்பற்ற வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Post a Comment