Header Ads



7 மாதங்களில் இலங்கையர்கள் அனுப்பிய 5,000 மில்லியன் டொலர்கள்


இவ்வருடத்தின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து பெறப்பட்ட மொத்தப் பணப்பரிமாற்றம் 5,000 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது. 


மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஆண்டின் குறித்த காலப்பகுதியில் பதிவாகியுள்ள மொத்த வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் 5,382.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். 


இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் வளர்ச்சியைக் காட்டுகின்றது. கடந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் 4,435.2 மில்லியன் அமெரிக்க டொலர்களே பதிவாகியிருந்தன.

No comments

Powered by Blogger.