Header Ads



5 இலட்சம் கொடுக்க முயன்றவர் வசமாக சிக்கினார்


போதைப்பொருள் வியாபாரி ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் சட்டவிரோதமாக விடுவிப்பதற்காக, தெல்தெனிய தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு 5 இலட்சம் ரூபாய் இலஞ்சம் கொடுக்க முயன்ற நபர் ஒருவரை தெல்தெனிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.


அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், கண்டி - தென்னேகும்புர பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பிரதான சந்தேகநபர் 10 கிராம் 795 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் தென்னேகும்புர பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.


இதன்போது, தலைமையக பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட தந்திரோபாய நடவடிக்கையின் மூலம், இலஞ்சப் பணத்தைக் கொடுக்க வந்த நபர் தெல்தெனிய பொலிஸ் நிலையத்தினுள்ளேயே வைத்து கைது செய்யப்பட்டார். 

No comments

Powered by Blogger.