ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அமைச்சு தொடர்பான 2027 வரவுசெலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல்
தற்போது இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் கீழ் இயங்கும் அனைத்து ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையங்களையும் ஒன்றிணைத்து தேசிய மையமொன்றை நிறுவுவதன் மூலம், அந்தப் பணிகளின் செயல்திறனையும் பயனுள்ள தன்மையையும் அதிகரிப்பதன் ஊடாக எதிர்பார்க்கும் இலக்குகளை அடைய முடியும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.
பாதுகாப்பு அமைச்சு தொடர்பான 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடலில் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் தற்போதைய உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கும் பாதுகாப்புப் படையினர் நவீன தொழில்நுட்பத்துடன் விரைவாக இணைவதற்கும் நவீன தொழில்நுட்ப உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கும் உள்ள தேவை குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

Post a Comment