சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்களால் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும்
உயர்நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக் காலத்தை நீடிப்பது தொடர்பான எந்தவொரு முன்மொழிவும் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்களால் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றியபோது இதனை தெரிவித்த அவர், அரசாங்கம் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும், வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் சூழலில் நியாயமற்ற வரிச் சுமையை சுமத்தியதன் மூலம் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
உர பற்றாக்குறை, உணவுப் பொருட்களின் விலை உயர்வு, அதிக வரிகள் மற்றும் பயன்பாட்டுக் கட்டண உயர்வு காரணமாக விவசாயிகள், கடற்றொழிலாளர்கள், மாணவர்கள், வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Post a Comment