Header Ads



பெரிய கனவோடு இருந்த பெண், இடையே வந்த மரணம்


பாணந்துறை - ஹிரன பகுதியைச் சேர்ந்த, தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்விகற்று வந்த, விமானப் பணிப்பெண்ணாக வரவேண்டும் என்ற பெரிய கனவோடு இருந்த 20 வயதுடைய, ஒடித்யா முதுமாலி விஜேசேகர என்ற யுவதி  சுவாச கோளாறு காரணமாக உயிரிழந்துள்ளார்.


இளம் அழகியான ஒடித்யா, சிறு வயதில் இருந்தே சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்ததாகவும், எனினும் அவருடைய வாழ்க்கை இவ்வளவு வேகமாக நிறைவுக்கு வரும் என தாங்கள் நினைக்கவில்லை என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


எனினும், கடந்த 21ஆம் திகதி ஏற்பட்ட மூச்சுத் திணறலுக்குப் பிறகு, மரணத்திடம் இருந்து தப்பிப் பிழைத்து வர அவருக்கு இயலாமல் போனதாகவும் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.


அவருடைய தந்தை விஜேசேகர ஒரு தொழிலதிபர் எனவும், 16 மற்றும் 13 வயதுகளையுடைய இரு சகோதரிகள் ஒடித்யாவுக்கு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

No comments

Powered by Blogger.