இலங்கையின் தாக்குப் பிடிக்கும் திறனுக்கு IMF பாராட்டு
ஜனாதிபதியின் சீர்திருத்தத் திட்டத்திற்கான ஆதரவை IMF மீண்டும் உறுதிப்படுத்தியது.
பொருளாதார மீட்சியின் உண்மையான பலன்கள் மக்களுக்குச் சென்றடைய வேண்டும். - ஜனாதிபதி -
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சொனாலி ஜெயின்-சந்திரா தலைமையிலான IMF தூதுக்குழுவினர் இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார வைச் சந்தித்தனர். இதன்போது, பொருளாதார மீட்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் இலங்கையின் மீளெழுச்சித் திறன் ஆகியவற்றை நாணய நிதியத் தூதுக்குழுவினர் பாராட்டினர்.

Post a Comment