தபால் திணைக்களம் அமெரிக்க அஞ்சல் துறைக்குச் செலுத்திய 625,000 டொலர்கள் மாயம்
தபால் திணைக்களத்தால் அமெரிக்க அஞ்சல் துறைக்குச் செலுத்தப்பட்ட 625,000 டொலர் பணம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்குக் கிடைக்காத சம்பவம் குறித்து, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.
குறித்த பரிவர்த்தனைகள் 2 வெவ்வேறு சமயங்களில் மேற்கொள்ளப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அது எவ்வாறு நிகழ்ந்தது என்பது தொடர்பில் அஞ்சல் திணைக்களம் மற்றும் குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தால் ஒரு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment