வங்கதேச தேசியவாதக் கட்சி (BNP) முன்னிலை - பிரதமர் ஆகிறார் தாரிக் ரஹ்மான்
வங்கதேச பாராளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது, இதில் வங்கதேச தேசியவாதக் கட்சி (BNP) முன்னிலை வகிக்கிறது என்றும், ஜமாத்-இ-இஸ்லாமி இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும், உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.
ஊடகங்களின் கூற்றுப்படி, பிஎன்பி மூன்றில் இரண்டு பங்கு இடங்களை வெல்லும் என்றும் கணிக்கப்படுகிறது.
பிஎன்பி, முன்னாள் வங்கதேச பிரதமர் கலீதா ஜியாவின் கட்சி ஆகும். அவரது மரணத்திற்குப் பிறகு, அவரது மகன் தாரிக் ரஹ்மான் அதன் முக்கிய தலைவராகக் கருதப்படுகிறார்.

Post a Comment