Header Ads



பாகிஸ்தானுக்கு நன்றி கூறியுள்ள அநுரகுமார


இந்தியாவுடன் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தீர்மானித்தமைக்காக, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்க்கு தனது நன்றியைத் தெரிவிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் பதிவிட்டுள்ளார். 


அதன்படி, டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி திட்டமிட்டபடி நடைபெறவுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். 


இந்தத் தொடரின் இணை நடத்துனர் என்ற வகையில், சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கும் (ICC) இதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் இலங்கை தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. 

No comments

Powered by Blogger.