தனது வீட்டிற்கே தீ வைத்தவரினால் ஏற்பட்ட விபரீதம்
குடும்பத் தகராறு காரணமாக நபரொருவர் பெற்றோல் ஊற்றி தனது வீட்டை தீ வைத்ததுடன், தீயில் சிக்கி அந்த நபரும், அவரது மகளும் உயிரிழந்தனர்.
இன்று (06) அதிகாலை 2.00 மணியளவில் கலென்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரகம் கொலனி, படிகாரமடுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபரொருவரால் இந்தத் தீ வைப்பு சம்பவம் இடம்பெற்றிருந்தது.
தீயினால், தீயை வைத்த 43 வயதுடைய நபரும் அவரது 13 வயது மகளும் உயிரிழந்தனர்.
தீயில் சிக்கிய 36 வயதுடைய மனைவி, 15 வயது மகள், 20 வயது மகன் மற்றும் 66 வயதுடைய பாட்டி ஆகியோர் தீக்காயங்களுக்கு உள்ளாகி அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment