தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்ததோடு, மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (24) மாலை கொழும்பிலிருந்து மத்தளை நோக்கிச் சென்ற கார் ஒன்று தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ பிரதேசதடுப்புச் சுவரில் முட்டி மோதி வீதியில் கவிழ்ந்துள்ளது.
காரின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கத்தினால் இவ் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment