நுவரெலியாவில் ஏரிக்குள் வீழ்ந்த விமானம்
நுவரெலியா, கிரெகரி ஏரியில் தரையிறங்கத் தயாரான, நீர் விமானம் (சீ பிளேன்) இன்று (07) விபத்துக்குள்ளாகி வீழ்ந்துள்ளது.
விமானம் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 2 விமானிகள் காயமடைந்து நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியாவிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் குழுவொன்றை ஏற்றிச் செல்வதற்காக வந்தபோதே விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானத்தில் இருந்த 2 விமானிகளையும், ஏரியில் படகு சவாரி செய்துகொண்டிருந்தவர்கள் மீட்டுள்ளனர்.

Post a Comment