கத்தார் அமீருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு
இலங்கை முழுவதும் அவசரநிலையை ஏற்படுத்திய தித்வா சூறாவளியைத் தொடர்ந்து, மக்களின் வாழ்க்கை, வாழ்வாதாரம், வீட்டுவசதி, மருத்துவமனைகள், முக்கிய வீதி வலையமைப்புகளை கடுமையாக பாதித்த போது, கத்தார் அமீர் ஷேக் @TamimBinHamad அவர்கள் வழங்கிய ஆதரவுக்கு, நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்கள் சர்வதேச நண்பர்களின் அன்பான ஆதரவுடன், நாங்கள் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முடித்து, இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நிதியத்தின் மூலம் மீள்குடியேற்றம், இடமாற்றம் மற்றும் மறுகட்டமைப்பு ஆகியவற்றைத் தொடங்கியுள்ளோம். இந்த முக்கியமான தருணத்தில் கத்தாரின் ஆதரவுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா

Post a Comment