Header Ads



சிவப்பு எச்சரிக்கை


மத்திய மலைநாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள எட்டு பிரதேச செயலகப் பிரிவுகளில் நிலச்சரிவு ஏற்படுவதற்கான நிலை 3 சிவப்பு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ளது.


வௌ்ளிக்கிழமை (19) அன்று காலை வெளியிடப்பட்ட அறிவிப்புகளின்படி, 32 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு நிலை 2 சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, மேலும் 18 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு நிலை 1 எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அதன்படி, கண்டி மாவட்டத்தில் மினிபே, உடதும்பர, தொழுவ மற்றும் மெததும்பர ஆகிய எட்டு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தில் மத்துரட்ட, வலப்பனே, ஹங்குரன்கெத்த மற்றும் நில்தண்டாஹின்ன ஆகிய எட்டு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் நிலை 3 சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.