சவுதி அரேபியாவிலிருந்து வந்த, உண்மைக் கதை
ஹிசாம் அல்-காம்டி என்ற முதியவர் தனது தம்பிக்கு எதிராக நீதிமன்றம் சென்றார். சண்டையிட அல்ல, மாறாக இருவரும் தங்கள் தாயைப் பராமரிக்கும் பாக்கியத்தை விரும்பியதால்..
ஹிசாம் தாயை பராமரிப்பதைத் தொடர, தனது வாழ்நாள் முழுவதும் தாயை பராமரிக்க வேண்டுமென விரும்பினார்.
ஹிசாம் மிகவும் வயதானவர் என்றும், ஓய்வு தேவை என்றும் நம்பிய அவரது தம்பி அதற்கு உடன்படவில்லை.
இருவரும் தங்கள் தாய்க்கு சேவை செய்ய வாய்ப்பு கேட்டு மன்றாடியதால், நீதிமன்றம் உணர்வு ரீதியாக மாறியது.
நீதிபதி தாயை வரவழைத்தார். எந்த மகனிடம் இருக்க வேண்டுமென்பதை தெரிவு செய்யுமாறு கூறினார்.
ஆனால் அவள் முடியாது என்று சொன்னாள். இரண்டு மகன்களும் அவளுடைய இடது மற்றும் வலது கண்களைப் போன்றவர்கள்.
அவளால் முடிவெடுக்க முடியாததால், இளைய சகோதரனின் வலிமை மற்றும் இளைய வயது காரணமாக நீதிபதி அவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார். முடிவு அறிவிக்கப்பட்டபோது, ஹிசாம் கண்ணீர் விட்டார் கோபத்தால் அல்ல. மாறாக தனது தாயின் இறுதி ஆண்டுகளில் தொடர்ந்து சேவை செய்யும் வாய்ப்பை இழந்துவிட்டதாக உணர்ந்ததால்...

Post a Comment