தேர்தல் ஆணையாளர் ஓய்வு பெற்றார்
தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க 13-11-2025 முதல் தனது பதவியிலிருந்தும் அரச சேவையிலிருந்தும் ஓய்வு பெற்றார்.
அரச துறையில் 34 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் தான் பதவி விலகுவதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
2019 ஒக்டோபர் 16 ஆம் திகதி அவர் தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டார்.
அதன் பின்னர் தனது பதவிக் காலத்தில் தேசிய மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதில் அவர் பங்காற்றினார்.

Post a Comment