Header Ads



அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு வத்திக்கான உயரதிகாரி பாராட்டு


உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு  இலங்கைக்கு வருகை தந்துள்ள வத்திக்கானின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர் இன்று (04)  ஜனாதிபதி செயலகத்தில் , ஜனாதிபதி அனுரகுமார சந்தித்தார்.


நாட்டில் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதன் மூலம் இலங்கையை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவர அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளை அவர் மிகவும் பாராட்டியதுடன், பொருளாதாரத்தை உறுதிப்படுத்தவும் தேசிய ஒற்றுமையை மேம்படுத்தவும் இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு வத்திக்கான் ஆதரவளிக்கும் என்றும் தெரிவித்தார்.


இலங்கைக்கும் வத்திக்கானுக்கும் இடையிலான அரை நூற்றாண்டு கால இராஜதந்திர உறவுகள் இந்நாட்டிற்கு பல நன்மைகளைத் பெற்றுத் தந்துள்ளது என்றும், அது ஆன்மீக ரீதியானது மட்டுமன்றி, நாட்டில் மனித கண்ணியத்தை மேம்படுத்துவதில் மிகவும் முக்கியமானதாக அமைந்ததாக இங்கு ஜனாதிபதி அனுரகுமார  குறிப்பிட்டதுடன், அதற்காக நன்றி தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.