அபே ஜனபல கட்சி தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கத் தீர்மானம்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் அங்கம் வகிக்கும் அபே ஜனபல கட்சி தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தக வீரகோன் அறிவித்துள்ளார்.
அந்தக் கட்சியின் உயர்பீடம், தேசிய மக்கள் சக்தி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்குத் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தல்களில் தமது கட்சியின் ஆதரவை தேசிய மக்கள் சக்திக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
ஜனாதிபதி நாட்டு மக்களுக்காக முன்னெடுக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்கும் அபே ஜனபல கட்சி எதிர்பார்ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் பெரும்பாலான தேசியப் பணிகளை அபே ஜனபல கட்சி பாராட்டியுள்ளது.

Post a Comment