கறுப்பு குற்ற அரசாங்கம் முழுமையாக ஒழிக்கப்படும் - ஜனாதிபதி
வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் மக்களுக்கானது மாத்திரமே. கறுப்பு குற்ற அரசாங்கம் முழுமையாக ஒழிக்கப்படும். 2028 ஆம் ஆண்டு கடன்களை மீளச் செலுத்த முடியாது என பெரும்பாலானவர்கள் கூறி வரும் நிலையில், 2028 ஆம் ஆண்டு அந்த கடனை மீள செலுத்த முடியும்.
வரவு - செலவு திட்ட பற்றாக்குறை 6 தசம் 7 க்கு கீழ் கொண்டுவரப்படுமென எதிர்வுகூறப்பட்ட நிலையில் அதனை 5 தசம் 2 ஆக கொண்டுவர முடிந்துள்ளது. இலங்கையில் முதல் தடவையாக இத்தகையதொரு வரவு - செலவு திட்டம் கொண்டுவரப்படுள்ளது.
கார்த்திகை வீரர்கள் ஞாபகார்த்த நிகழ்வில் இன்று(13) கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.

Post a Comment