LGBTQ விஷயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு
LGBTQ விஷயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்றால், எந்தவொரு குறிப்பிட்ட குழுவிற்கும் அரசாங்கம் சிறப்பு சலுகைகளை ஊக்குவிக்கவோ அல்லது வழங்கவோ மாட்டாது. அரசியல் ஆதாயத்திற்காக உணர்வுபூர்வமான பிரச்சினைகளைப் பயன்படுத்தக் கூடாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கவிந்த ஜெயவர்தன Mp எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது பிரதமர் இவ்வாறு கூறினார்.
இலங்கையில் LGBTQ சுற்றுலாவை மேம்படுத்துவது தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி ஆணைக்குழுத் (SLTDA) தலைவர் அரசியல் அதிகாரசபையுடன் கலந்தாலோசிக்காமல் LGBTQ சுற்றுலா தொடர்பாக ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்

Post a Comment