Header Ads



முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்த வேண்டும் - பலதார மணத்தை ஒழிக்க வேண்டும்


முஸ்லிம் விவாக மற்றும் விவா­க­ரத்துச் சட்டம் உட்­பட நாட்டின் தனியார் சட்­டங்களில் சர்­வ­தேச தரத்­திற்கு ஏற்­ற­வாறு திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­குழு வலி­யு­றுத்­தி­யுள்­ளது. இது தொடர்பில் கடந்த திங்கட் கிழமை வெளி­யிட்­டுள்ள விசேட அறிக்­கை­யி­லேயே மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் நீதி­ய­ரசர் எல்.ரி.பி. தெஹி­தெ­னிய இவ்­வாறு தெரி­வித்துள்ளார்.


முஸ்லிம் விவாக மற்றும் விவா­க­ரத்துச் சட்­டத்தில் உள்ள பாகு­பாடு காட்டும் மற்றும் சர்­வ­தேச தரங்­க­ளுக்கு முர­ணான விதி­களில் உட­ன­டி­யாக திருத்தம் தேவை என வலி­யு­றுத்­தி­யுள்ள ஆணைக்­குழு, நாட்டின் தேசிய சட்­டங்கள் சர்­வ­தேச மனித உரி­மைகள் தரங்­க­ளுடன் ஒத்­துப்­போ­வதை உறுதி செய்யும் கடமை தமக்கு உள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.


அர­சி­ய­ல­மைப்புச் சட்டம் மற்றும் சர்­வ­தேச உடன்­ப­டிக்­கை­களை மேற்­கோள்­காட்­டி­யுள்ள ஆணைக்­குழு, நாட்டில் பெண்­களின் சுகா­தாரம் மற்றும் கல்­வியில் முன்­னேற்றம் இருந்­தாலும், பாகு­பாடு மற்றும் பாலின அடிப்­ப­டை­யி­லான வன்­முறை பிரச்­சி­னைகள் இன்னும் நில­வு­வ­தாகக் குறிப்­பிட்­டுள்­ளது. கண்­டியச் சட்டம், முஸ்லிம் திரு­மணச் சட்டம் மற்றும் யாழ்ப்­பாண திரு­மண உரி­மைகள் மற்றும் மர­பு­ரிமைச் சட்டம் போன்ற தனியார் சட்­டங்­களில் சீர்­தி­ருத்தம் தேவைப்­படும் பல விதிகள் உள்­ள­தாக ஆணைக்­குழு தனது அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.


முஸ்லிம் விவாக மற்றும் விவா­க­ரத்துச் சட்­டத்தில் காணப்­படும் பல்­வேறு பாகு­பாடு காட்டும் விதி­களை ஆணைக்­குழு அடை­யாளம் கண்­டுள்­ளது. அவை­யா­வன:


1. இந்தச் சட்­டத்தின் கீழ் முஸ்லிம் ஆண்கள் மட்­டுமே பதி­வா­ளர்­க­ளா­கவும், காதி­க­ளா­கவும் (நீதி­ப­திகள்) நிய­மிக்­கப்­பட முடியும்.

2. ஆண்­க­ளுக்கும், பெண்­க­ளுக்கும் விவா­க­ரத்­துக்­கான நிபந்­த­னைகள் வேறு­ப­டு­கின்­றன. ஒரு கணவர் காரணம் கூறாமல் ‘தலாக்’ விவா­க­ரத்து செய்ய முடியும். ஆனால் ஒரு மனைவி ‘பஸ்ஹ{‘ விவா­க­ரத்து கோரும்­போது, திரு­மண முறி­வுக்­கான கார­ணத்தை நிரூ­பிப்­ப­துடன், இரு சாட்­சி­களால் அதனை உறு­திப்­ப­டுத்­தவும் வேண்டும். கணவர் தனது மனை­வியால் தொடங்­கப்­பட்ட விவா­க­ரத்தை மேல்­மு­றை­யீடு செய்ய முடியும், ஆனால் மனை­விக்கு அந்த உரிமை இல்லை.

3. திரு­மண சம்­மதம்: திரு­ம­ணத்தின் போது மண­ம­களின் கையொப்பம் சம்­ம­தத்­திற்­கான சான்­றாகக் கோரப்­ப­டு­வ­தில்லை. ஆனால் ஒரு ஆண் பாது­கா­வ­லரின் (வாலி) கையொப்பம் கட்­டா­ய­மாகும்.

4. முஸ்லிம் சட்­டத்தில் பல­தார மணம் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது. இது பெண்­களின் உரி­மை­யையும், ஊநு­னு­யுறு உடன்­ப­டிக்­கை­யையும் மீறு­வ­தாக ஆணைக்­குழு கரு­து­கி­றது. பல­தார மணங்­களில் உள்ள பெண்கள் பெரும்­பாலும் உள­வியல் ரீதி­யான அழுத்தம், கைவி­டுதல் மற்றும் வன்­மு­றையை எதிர்­கொள்­கி­றார்கள்.

5. முஸ்லிம் திரு­மணச் சட்­டத்தில் திரு­ம­ணத்­திற்­கான குறைந்­த­பட்ச வயது குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. ஒரு காதியின் அனு­ம­தி­யுடன் பன்­னி­ரண்டு வய­துக்­குட்­பட்ட ஒரு பெண்ணின் திரு­ம­ணத்தைப் பதிவு செய்ய இந்தச் சட்டம் அனு­ம­திக்­கி­றது. பெண் குழந்­தை­களின் திரு­மணம் உடல் மற்றும் மன ரீதி­யான பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­து­வதால் இது உட­ன­டி­யாக சீர்­தி­ருத்­தப்­பட வேண்டும் என ஆணைக்­குழு வலி­யு­றுத்­து­கி­றது.

6. காதி நீதி­மன்ற அமைப்­பா­னது பல குறை­பா­டு­களை கொண்­டுள்­ளது. பெண்­க­ளுக்கு இந்த அமைப்பின் மீது நம்­பிக்கை இல்லை. காதி நீதி­ப­திகள் நிய­ம­னத்­திற்கு முறை­யான தகு­திகள் அல்­லது பயிற்சி வரை­ய­றுக்­கப்­ப­ட­வில்லை.


இந்த அறிக்­கையில் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் முக்­கிய பரிந்­து­ரை­க­ளையும் முன்­வைத்­துள்­ளது.


1. அர­சி­ய­ல­மைப்பின் 12(1) மற்றும் 12(2) பிரி­வு­க­ளுடன் முரண்­படும் அனைத்து முஸ்லிம் திரு­மணச் சட்ட விதி­க­ளையும் திருத்த வேண்டும்.

2. அனை­வ­ருக்கும் குறைந்­த­பட்ச திரு­மண வயதை 18 ஆக நிர்­ண­யிக்க வேண்டும்.

3. காதி அமைப்பின் நேர்­ம­றை­யான அம்­சங்­களைத் தக்­க­வைத்­துக்­கொண்டு, பாகு­பாடு அற்ற, புதிய குடும்பச் சட்ட நீதிமன்ற அமைப்பை அறிமுகப்படுத்த வேண்டும்.

4. பெண் காதிகளை நியமிக்க அனுமதிக்கும் வகையில் சட்டத்தைத் திருத்த வேண்டும்.

5. பலதார மணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தச் சீர்திருத்தம் தொடர்பான கலந்தாலோசனைகள் முஸ்லிம் பெண்கள் உட்பட பரந்த சமூகத்தின் பங்களிப்புடன் விரைவாகவும், உள்ளடக்கியதாகவும் நடத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.- Vidivelli

No comments

Powered by Blogger.