யாழ்ப்பாணத்தில் புதிய கடவுச்சீட்டு அலுவலகம் - முதலாம் திகதி திறந்துவைக்கிறார் ஜனாதிபதி
செப்டம்பர் மாதம், 1 ஆம் திகதி (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு விநியோகத்திற்கான அலுவலகம் திறக்கப்படவுள்ளது.
வடமாகாண மக்கள் தமக்கான கடவுச் சீட்டுக்களை யாழ்ப்பாண புதிய அலுவலகத்தினுடாகப் பெற்றுக் கொள்ளலாம்.
அதற்கமைய, ஒருநாள், சாதாரண சேவைகளுடாக புதிய அலுவலகத்தில் கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படும். யாழ்ப்பாண புதிய கடவுச் சீட்டு அலுவலகத்தை ஜனாதிபதி அநுரகுமார திறந்து வைக்கவுள்ளார்.
70 மில்லியன் ரூபாய் செலவில் அலுவலக பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

Post a Comment