இப்படியும் ஏமாற்றுகிறார்கள்
காலி - ஹபராதுவ பீல்லகொட கடற்கரை பூங்காவிற்கு வருகை தரும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு பணம் வசூலித்த மூன்று நபர்களை உனவடுன சுற்றுலாப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பேருந்தை நிறுத்துவதற்கு 1,500 ரூபாவும் கார்கள் மற்றும் வேன்கள் உள்ளிட்ட பிற வாகனங்களை நிறுத்துவதற்கு 1,000 ரூபாவும் வசூலிக்கப்பட்டுள்ளது.
ஹபராதுவ பிரதேச சபையின் அதிகாரிகள் என்று கூறி வாகனங்களிலிருந்து பணம் வசூலித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 34, 35 மற்றும் 41 வயதானவர்கள்.

Post a Comment