இன்றும் புதிதாக 6 என்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு
செம்மணி - மனித புதைகுழி வளாகத்தில் 2 வது நாளாக இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்ட ஸ்கேன் ஆய்வுகளில் புதிதாக 6 என்புக்கூட்டு தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதில் 4 என்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்று அகழ்ந்து எடுக்கப்பட்ட 04 என்புக்கூட்டு தொகுதியுடன் சேர்த்து, இதுவரை 130 என்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 141 என்புக்கூட்டு தொகுதிகள் வெளிப்பட்டுள்ளன.

Post a Comment