விடாப்பிடியாக உள்ள இம்தியாஸ்
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர் பதவியை மீண்டும் பொறுப்பேற்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மீண்டும் நிராகரித்துள்ளார். கட்சியின் செயற்பாட்டாளர்கள் சிலர் அவரது வீட்டிற்கு சென்று மீண்டும் தவிசாளர் பதவியை பொறுப்பேற்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும் தவிசாளர் பதவி தொடர்பான தமது தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என இம்தியாஸ் பக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர் பதவியை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment