வட்ஸப் குழுவில் கருத்து மோதல் - துப்பாக்கியுடன் வந்து அச்சுறுத்தியவர்
வட்ஸப் குழுவில் நண்பர்கள் இடையேயான கருத்து மோதல் காரணமாக துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய சம்பவம் நீர்கொழும்பு தலாதுவ பகுதியில் இன்று (28) பதிவானது. துப்பாக்கியை வைத்திருந்த நபர் ஒருவர், வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
எனினும் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ஒரே பாடசாலையில் கல்வி கற்ற 53 வயதான இரு நண்பர்கள் இடையே இந்த கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. துப்பாக்கியை வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
Post a Comment