முகலாய மன்னர்களின் கடைசி வாரிசான, இளவரசர் அலிகான் மஹ்மூதாபாத்தை கைதுசெய்த பிஜேபி அரசு.
கைதுக்கு காரணமாக சொல்லப் படுகிற அவரின் பேஸ்புக் பதிவு: 👇
கர்னல் சோபியா குரேஷியை பலரும் பாராட்டுகிறார்கள் நானும் பாராட்டுகிறேன் அவரது சேவை நாட்டுக்கு பெருமையை கொடுத்துள்ளது ஆனால் சோபியா குரேஷியை பாராட்டும் பலரும். இங்குள்ள சாதாரண முஸ்லிம்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு ஏன் குரல் கொடுப்பதில்லை.
மதவாத கும்பல்களால் முஸ்லிம்கள் படுகொலை செய்யப் படுகிறார்கள் அவர்களது வீடுகள் இடிக்கப் படுகின்றன அதற்கும் குரல் கொடுங்கள் சோபியா குரோஷிக்கு மட்டும் குரல் கொடுத்து பாசாங்கு செய்யாதீர்கள் என பேஸ்புக்கில் பதிவிட்டமைக்காக கைது செய்யப் பட்டுள்ளார்.
ஹரியானாவில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தின் அரசியல், அறிவியல் பேராசிரியரும், துறைத்தலைவருமான அலிகான் மஹ்முதாபாத் பெரும் கல்வியாளர்.
"காலனித்துவ இந்திய பிற்பகுதியில் முஸ்லீம் அரசியல் சிந்தனை குறித்து நிபுணத்துவம் பெற்றவர். அதைப்பற்றி ஒரு புத்தகமும் எழுதியுள்ளார். இந்தி, உருது மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளை நன்கு அறிந்த பன்மொழி அறிஞர். இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் மற்றும் சிரியாவில் டமாஸ்கஸ் ஆகிய 2 இடங்களிலும் அலி கான் பயின்றுள்ளார்.
அலிகான் மஹ்மூதாபாத் 1982 டிச.2-ம் தேதி பிறந்தார். லக்னோவில் உள்ள லா மார்டினியர் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியை முடித்தார். பின்னர் 1996 வரை இங்கிலாந்தில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் பயின்றார். 2001-ல் வின்செஸ்டர் கல்லூரியில் பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
அவருடைய சொத்து லக்னோ நகரின் மைய பகுதியில் உள்ள பல நிலங்களை உள்ளடக்கியவையாகும். இதில் புகழ்பெற்ற பட்லர் அரண்மனை, ஹஜ்ரத்கஞ்ச் சந்தையின் பெரிய பகுதி, ஹல்வாசியா சந்தை மற்றும் மஹ்மூதாபாத் கிலா ஆகியவை அடங்கும்.
இவை அனைத்தும் சேர்ந்து 50,000 ஆயிரம் கோடி மதிப்புடையவையாக உள்ளன. மஹ்மூதாபாத் குடும்பத்தின் சொத்துகள் லக்னோ, சீதாப்பூர் மற்றும் உத்தரகண்டின் நைனிதால் ஆகிய இடங்களில் பரந்து பரவியுள்ளன.
அலிகான் பிரபலமான ராஜா சாஹிப் மஹ்மூதாபாத் என்று அறியப்பட்ட முகமது அமீர் முகமது கான் "சுலைமான்" அவர்களின் மகன் ஆவார்.
அவரது தந்தை சுலைமான் மஹ்மூதாபாத்திலிருந்து 2 முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாகவும், உத்தரபிரதேசத்தின் அவாத் பிராந்தியத்தில் பிரபலமான அரசியல்வாதியாகவும் இருந்தவர் முஸ்லீம் லீக்கின் நீண்டகால பொருளாளராகவும், முக்கிய நிதியுதவியாளராகவும் இருந்தார்.
இந்தியாவில் மிச்சமுள்ள இஸ்லாமிய அறிவியல், அரசியல் ஆளுமைகளை குறிவைத்து காலிபண்ணும் வேலையை கச்சிதமாக செய்கிறதா பிஜேபி அரசு ??
- ஹைதர் அலி -
Post a Comment