Header Ads



தேசபந்து தென்னகோன் தலைமறைவு


நீதிமன்றத்தால் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தற்போது தலைமறைவாக உள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். 


வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 


இதற்கு பதிலளித்த பிரதி அமைச்சர், முன்னாள் பொலிஸ் மா அதிபரை கைது செய்ய பொலிஸார் சுயாதீனமாக செயற்பட்டு வருவதாகக் கூறினார்.

No comments

Powered by Blogger.