Header Ads



சஞ்ஜீவவின் சடலத்தை பொறுப்பேற்க எவரும் முன்வரவில்லை


கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்திற்குள் நேற்று பரபரப்பை ஏற்படுத்திய கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.


பல பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


சுட்டுக்கொல்லப்பட்ட பாதாள குழு தலைவர் கனேமுல்ல சஞ்ஜீவவின் சடலத்தை பொறுப்பேற்க அவர்களின் உறவினர்கள் எவரும் முன்வரவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.