Header Ads



2 ஆவது நாளாக உச்சத்தை தொட்ட பங்குச் சந்தை


கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (13) 169.53 புள்ளிகள் அதிகரித்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.


அதன்படி, கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 14,205.34 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.


மேலும், இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 6.1 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.


இதேவேளை, நேற்றைய தினம் (12) வரலாற்றில் முதற்தடவையாக கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண்  14,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.