Header Ads



அரசியலிலிருந்து ஓய்வுபெறும் உத்தேசம் இல்லை - மகிந்த


அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ளும் உத்தேசம் தமக்கு கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் காலங்களிலும் செயற்பாட்டு அரசியலில் ஈடுபட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்குமாறு இதுவரையில் தம்மிடம் எவரும் கோரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி அல்லது வேறு கட்சியின் அரசியல் தலைவர்கள் எவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு கோரியதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


பல அரசியல்வாதிகள் தம்மை சந்திக்க வருவதாகவும் , அவர்கள் தமது சகல நலன்களை விசாரித்து செல்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. வயதா என்ன? ஒரு எழுபது வயது என்பது வாலிபம். இன்னும் 950 வருடங்கள் இருக்கவே இருக்கின்றது. தாராளமாக இன்னும் இலங்கையின் மூலைமுடுக்குகளில் சுரண்ட வேண்டிய அத்தனையையும் சுரண்டிக் கொள்ள தாராளமாக காலமும் நேரமும் இருக்கின்றது. எனவே தாராளமாக அரசியல் செய்யுங்கள். அடுத்த மூன்றாவது சனாதிபதியாகும் வாய்ப்புகள் இருப்பதாக சோதிடம் கூறியதாக அறியக்கிடைக்கின்றது.

    ReplyDelete

Powered by Blogger.