Header Ads



பாடசாலை மாணவர்களுக்கு ஜப்பானில் இருந்து சைக்கிள்கள் !


தொலைதூரப் பிரதேசங்களில் உள்ள பாடசாலை மாணவர்களின் தினசரி வருகையை ஊக்குவிக்கும் நோக்கில், ஜப்பானிய ‘சைல்ட்ஃபண்ட்’ அமைப்பு, இலங்கைக்கு 500 துவிச்சக்கர வண்டிகளை மானியமாக வழங்கியுள்ளது.


சுசில் பிரேமஜயந்தவின் தலைமையில், பத்தரமுல்லையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் , ஜப்பானிய ‘Childfund’ நிறுவனத்தின் பிரதிநிதி மற்றும் இலங்கை ‘Childfund’ நிறுவனத்தின் தேசிய பணிப்பாளர் அதிதி கோஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.


ஏற்கனவே மொனராகலை, புத்தளம், முல்லைத்தீவு போன்ற போக்குவரத்துச் சிரமங்கள் உள்ள 12 மாவட்டங்களில் உள்ள 108 பாடசாலைகளில் இருந்து 12-16 வயதுக்குட்பட்ட பொருத்தமான மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வீட்டில் இருந்து பாடசாலைக்கு குறைந்தபட்சம் இரண்டரை கிலோமீட்டர் தூரம் இருக்க வேண்டும் என்பது இந்த சைக்கிள்களை வழங்குவதில் முக்கிய நிபந்தனையாக கருதப்பட்டது. இலங்கை ‘Childfund” வேண்டுகோளுக்கு இணங்க இந்த சைக்கிள்கள் பெறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.