Header Ads



இலங்கையில் பிறப்பு வீதம் வீழ்ந்தது


இலங்கையில் பிறப்பு சதவீதம் குறைந்துள்ளமையால், பாடசாலைகளுக்கு உள்ளீர்க்கும் மாணவர்களின் எண்ணிக்கை 50, ஆயிரமாக குறைந்துள்ளது என கல்வி அமைச்சர் சுசில் தெரிவித்துள்ளார்.


பாடசாலைகளுக்கு 5 வயது நிறைவடைந்தவுடன் மாணவர்களாக உள்ளீர்க்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.


பாடசாலைகளுக்கு தற்போது உள்ளீர்க்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை 2 இலட்சத்து 90 ஆயிரம் பேராகும்.


இருப்பினும், 10 வருடங்களுக்கு முன்னர், பாடசாலைகளுக்கு 3 இலட்சத்து 40 ஆயிரம் பிள்ளைகள் உள்ளீர்க்கப்பட்டனர் என்றார்.


நாடாளுமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்வியமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.






No comments

Powered by Blogger.