Header Ads



25 ஆளும்கட்சி Mp க்கள், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைகிறார்கள்


ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைய தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.


கடந்த பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு இக்குழுவினர் நாடாளுமன்றத்திற்கு தெரிவானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


நால்வர் கொண்ட குடும்பம் அடுத்த வருடம் செலுத்த வேண்டிய வட் வரி தொடர்பில் வெளியான தகவல்


இந்த குழுவுடன் கூட்டு எதிர்க்கட்சியாகவும் எதிர்காலத்தில் அரசியல் கூட்டமைப்பாகவும் இணைந்து செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கான புதிய கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.