Header Ads



தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த தாய்க்கு நிகழ்ந்த கொடூரச் செயல்


தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த தாய்க்கு நிகழ்ந்த கொடூரச் சம்பவம்


கம்பஹா பூகொட, அம்கஹவத்த பிரதேசத்தில் இளம் தாய் ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.


குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த இளம் தாயின் குழந்தையைப் பணய கைதியாக வைத்து, தாயை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக பூகொட பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.


குழந்தையை தரையில் அடிக்கப் போவதாக மிரட்டியே இந்த குற்ற செயல் செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் 21 மற்றும் 23 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தாய் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேலும் ஒருவரை கைது செய்ய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments

Powered by Blogger.