கோடீஸ்வர வர்த்தகர் சுட்டுக்கொலை - பலத்த பாதுகாப்புடன் அஞ்சலி செலுத்திய கோட்டாபய
காலியில் சுட்டுக் கொல்லப்பட்ட கோடீஸ்வர வர்த்தகர் லலித் வசந்த மெண்டிஸின் உடலுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று பிற்பகல் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி காலி சென்றுள்ளார்.
கடந்த சனிக்கிழமை காலி டிக்சன் சந்தியில் வைத்து இந்த வர்த்தகர் சுட்டுக் கொல்லப்பட்டார். லலித் வசந்த மெண்டிஸ் இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக்காவின் மாமனார் ஆவார் .

Post a Comment