Header Ads



"என் மகனை எனது இரண்டாம் மகன், இரத்­தக்­க­றை­யோடு தூக்கிக்கொண்டுறி­யாது நின்­றதைக் கண்டு பத­றிப்­போனேன்’’


“தண்ணீர் பவுஸர் டயரில் சிக்கி உயி­ரி­ழந்த என் மகனை எனது இரண்டாம் மகன் இரத்­தக்­க­றை­யோடு தூக்கிக் கொண்டு செய்­வ­த­றி­யாது நின்­றதைக் கண்டு நான் பத­றிப்­போனேன்’’ என வாழைச்­சேனை விபத்தில் உயி­ரி­ழந்த ருஷ்திக் எனும் சிறு­வனின் தந்தை சரீப் முகம்­மது சாதீக் கோர விபத்தின் வலி­களை சொல்லி அழுதார்.


தண்ணீர் பவுஸர் விபத்தில் முகம்­மது சாதீக் ருஷ்திக் எனும் ஆறு வயது சிறுவன் ஒருவன் மர­ண­மான சம்­பவம் வாழைச்­சேனை பிர­தே­சேத்தை கடும் சோகத்­தையும், பதற்­றத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.


இந்த சம்­பவம் கடந்த சனிக்­கி­ழமை 29 ஆம் திகதி வாழைச்­சேனை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட ரிதி­தென்ன பகு­தியில் மாலை 6.30 மணி­ய­ளவில் இடம்­பெற்­றுள்­ளது.


“எனது மகன் என்னை ஒரு ­நாளும் காணாமல் இருப்­ப­தில்லை. அவர் பாட­சாலை முடிந்து வரும்­போது எனது கடைக்கு வந்து ஜுஸ் வாங்கி குடித்து விட்­டுத்தான் வீடு செல்­வது வழக்கம். அதே­போன்­றுதான் அவர் மர­ணித்த அன்றும் வீடு ஒன்றில் நடை­பெறும் பிரத்­தி­யேக வகுப்பு முடிந்து எனது கடைக்கு வரும்­போது விபத்தில் சிக்கி எனது பிள்ளை மவுத்­தாகி விட்டார் என்று கண்ணீர் மல்க தனது மகன் மர­ண­மான சம்­ப­வத்தை விப­ரித்தார் சலீம் என அழைக்­கப்­படும் சரீப் முகம்­மது சாதீக்.


நான்கு பிள்­ளை­களின் தந்­தை­யான சலீம் ரிதி­தென்­னையில் கோழிக்­கடை வைத்து வியா­பாரம் செய்து வரு­கிறார்.


அன்­றைய தினம் ஆசூரா நோன்பு என்­பதால் சலீமின் குடும்­பத்­தினர் நோன்பு நோற்­றுள்­ளனர். நோன்பு திறப்­ப­தற்­கான சாப்­பா­டு­களை பெற்­றுக்­கொள்ள எனது கடையை நோக்கி எனது இரண்­டா­வது மக­னுடன் துவிச்­சக்­கர வண்­டியில் வரும் போது தான் ருஸ்திக் பவுஸர் விபத்தில் மர­ண­ம­டைந்தார்.

நான் வீட்டில் இருந்து கடைக்கு செல்­லும்­போது பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த பவுஸர் சார­தியும், நடத்­து­னரும் மது அருந்திக் கொண்டு நின்­றதைக் கண்டேன்.


எனது பிள்­ளைகள் துவிச்­சக்­கர வண்­டியில் செல்லும் போது முன்­னோக்கிச் சென்ற பவுஸர் திடீரென பின்­னோக்கி வந்­ததில் தான் எனது மகன் பவுஸர் டய­ருக்குள் அகப்­பட்டு சம்­பவ இடத்தில் மவுத்­தா­கி­யுள்ளார்.


விபத்து நடந்த சந்­தர்ப்­பத்தில் அவ்­வி­டத்தில் யாரு­மில்லை. சைக்கிள் ஓடி வந்த ஒன்­பதாம் தரத்தில் படிக்கும் எனது இரண்­டா­வது மகன்தான் இரத்த வெள்­ளத்தில் மூழ்கிக் கிடந்த எனது மகன் ருஸ்­திக்கை மர­ணித்த நிலையில் செய்­வ­த­றி­யாமல் தூக்­கி­ய­வாறு நின்­றுள்ளார் என்றார் தந்தை சலீம்.


விபத்தை ஏற்­ப­டுத்திவிட்டு சார­தியும், நடத்­து­னரும் அந்த இடத்­தி­லி­ருந்து தப்பிச் செல்ல முற்­பட்ட போது ஆத்­தி­ர­ம­டைந்த பொது­மக்கள் அவர்­களை மடக்­கிப்­பி­டித்து பவு­ஸ­ருக்கு தீ வைத்துள்­ளனர். இந்­நி­லையில், அப்­ப­கு­தியில் ஏற்­பட்ட பதற்ற நிலையை பொலிஸார் உட­ன­டி­யாக தலை­யிட்டு கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வந்­தனர்.


பவுஸர் முற்­றாக தீயில் எரிந்­த­துடன், சார­தி­யையும், நடத்­து­ன­ரையும் வாழைச்­சேனை பொலிஸார் கைது செய்­தனர்.


மர­ண­ம­டைந்த சிறுவன் ருஸ்திக் ரிதி­தென்ன இக்ரஹ் வித்­தி­யா­ல­யத்தில் தரம் ஒன்றில் கல்வி கற்று வரு­கிறார்.


அமை­தி­யான சுபாவம் கொண்ட இவர் கல்வியில் மிகவும் ஆர்­வ­மிக்­கவர் என்று பொறுப்­பா­சி­ரியர் மிப்றாஸ் தெரி­வித்தார்.


பாட­சாலை சூழலில் மென்­மை­யாக நடந்து கொள்ளும் சிறு­வனின் இழப்பு பாட­சாலை சமூ­கத்தை கடும் சோகத்தில் ஆழ்த்­தி­யுள்­ள­தாக பாட­சா­லையில் அதிபர் எம்.எஸ்.எம்.றிஸ்மின் தெரி­வித்தார்.


ரிதி­தென்ன பகு­தியில் மண் களஞ்­சி­யசாலையில் மண்ணுக்கு தண்ணீர் தெளிக்கும் பவுஸர் வண்­டியே இவ்­வாறு விபத்­தினை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

குறித்த பகு­தியில் சட்­ட­வி­ரோ­த­மாக மண் அகழ்­வுகள் இடம்­பெ­று­வ­தா­கவும் இதனால் முறை­யற்ற விதத்தில் சிறிய வீதி­களில் கன­ரக வாக­னங்கள் மனித உயிர்­களை அச்­சு­றுத்திச் செல்­வ­தா­கவும் பிர­தேச மக்கள் குற்றம் சுமத்­து­கின்­றனர்.


இந்த விபத்தில் மர­ண­ம­டைந்த சிறு­வனின் ஜனாஸா வைத்­திய பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனைகளின் பின்னர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


சிறுவன் ருஸ்திக்கின் ஜனாஸா ஞாயிற்றுக்கிழமை (30) மாலை 6 மணியளவில் ரிதிதென்ன புதிய கிராமம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli,-எச்.எம்.எம்.பர்ஸான்-


No comments

Powered by Blogger.