Header Ads



இந்தியரை கொன்ற 2 சவுதியர்களுக்கு மரண தண்டனை


முகம்மது உசேன் அன்சாரி என்ற இந்தியரை தாக்கி, கொள்ளையடித்து, கார் ஏற்றி கொன்ற குற்றத்திற்காக அப்துல்லா முபாரக் அல் அஜாமி முகம்மது மற்றும் சயாலி அல் அனாசி என்ற இரண்டு சவுதி குடிமகன்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.


அரசு தரப்பு எழுப்பிய குற்றச்சாட்டுகள் உறுதிபடுத்தப்பட்டதை தொடர்ந்து அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. 


இன்று திங்கட்கிழமை, 7 ஆம் திகதி ரியாத்தில் இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது

No comments

Powered by Blogger.