Header Ads



தம்பதியினர் உயிரிழப்பு



அம்பாந்தோட்டையில் வாகன விபத்தொன்றில் வயோதிபத் தம்பதியினர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.


ஓட்டோவுடன் லொறி மோதியதில் ஏற்பட்ட விபத்திலேயே குறித்த தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த விபத்துச் சம்பவம் அம்பாந்தோட்டை, வலஸ்முல்லை பிரதேசத்தில் நேற்றிரவு (09) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த வயோதிபத் தம்பதியினர் ஓட்டோவில் வைத்தியசாலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளை விபத்தில் சிக்கியுள்ளனர்.


விபத்தில் 77 வயதுடைய கணவன் சம்பவ இடத்திலும், 75 வயதுடைய மனைவி வைத்தியசாலையிலும் உயிரிழந்துள்ளனர்.


இவர்கள் பயணித்த ஓட்டோவின் சாரதியான 26 வயதுடைய இளைஞர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


ஓட்டோவுடன் மோதிய லொறியின் சாரதியான 35 வயதுடைய குடும்பஸ்தர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.