Header Ads



பௌத்த நிலைய சிரமதானத்தில் அரபுக் கல்லூரி, அஹதிய்யா, உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் பங்கேற்பு


இவ்வருடத்துக்கான (2023) தேசிய வெசாக் விழா இம்முறை புத்தளம் மாவட்டத்தின் சிலாபம் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


குறித்த இவ்விழாவினை சகல மதங்களும் இணைந்து பல்வேறுபட்ட நிகழ்வுகளின் ஊடாக சிறப்பிக்கவுள்ளமை இம்முறை விஷேட அம்சமாகும்.


அந்தவகையில் இந்து, கிறிஸ்தவ திணைக்கத்தைப் போன்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கமும் புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள நிகழ்வுகளில் 


இன்று  02-05-2023ம் செவ்வாய்க்கிழமை  ஆரம்ப நிகழ்வாக புத்தளம் பௌத்த மத்திய நிலையத்தில்  சிரமதான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


 இந்நிகழ்வில் அஹதிய்யா மாணவர்கள், காஸிமிய்யா அரபுக் கல்லூரி மாணவர்கள், உலமாக்கள், புத்தளம் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் சமூக நலன் விரும்பிகள் என பலர்  கலந்து சிறப்பித்தார்கள்.




No comments

Powered by Blogger.