Header Ads



ஒரு கோடியே 37 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கப் பொருட்கள். வெளிநாட்டு நாணயங்களை திருட்டு


பொரளையில் உள்ள வீடொன்றில் இருந்து ஒரு கோடியே 37 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கப் பொருட்கள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை திருடிய குற்றச்சாட்டில் நபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கிருலப்பனை பிரதேசத்தில் வசிக்கும் 46 வயதுடைய ஒருவரென தெரியவந்துள்ளது.


சந்தேகநபர் மீது 30 மேற்பட்ட வீடு உடைப்பு குற்றச்சாட்டுகள் இருப்பதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.