Header Ads



1000 பேர் தொழக்கூடிய பள்ளிவாசல் மூடல், நீதிமன்றில் 9 வழக்குகள் - சமூகம் விழித்தெழுமா..?


நாட்டில் இயங்­கி­வரும் வர­லாற்று புகழ்­மிக்க அர­புக் ­கல்­லூ­ரி­களில் மஹ­ர­கம கபூ­ரிய்யா அர­புக்­கல்­லூரி 92 வரு­ட­கால பழமை வாய்ந்த கலா­பீ­ட­மாகும். 


கபூர் ஹாஜி­யா­ரினால் வக்பு செய்­யப்­பட்டு பல தசாப்­த­ கா­ல­மாக சீராக இயங்கி வந்த கபூ­ரிய்யா அர­புக்­கல்­லூரி இன்று சவா­லுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. கபூ­ரிய்யா வக்பு சொத்­தல்ல அது குடும்பச் சொத்து என்று ஒரு குடும்­பத்­தி­னர் சொந்தம் கொண்­டா­டி­வரும் நிலையில், கபூ­ரிய்யா அர­புக்­கல்­லூ­ரியும் அதன் வக்பு சொத்­து­க­ளையும் பாது­காத்­துக்­கொள்­வ­தற்­காக சமூகம் பல்­வேறு முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கி­றது.


கபூ­ரிய்யா அர­புக் ­கல்­லூரி தொடர்­பான வழக்­குகள் நீதி­மன்­றங்­களில் நிலு­வையில் உள்­ளன. வக்பு ட்ரிபி­யுனில் மூன்று வழக்­கு­களும் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் ஐந்து வழக்­கு­களும், மாவட்ட நீதி­மன்றில் ஒரு வழக்கும் விசா­ர­ணையின் கீழ் உள்­ளன.


அண்மையில் நடாத்தப்பட்ட ‘கபூரிய்யாவைப் பாதுகாப்போம்’ எனும் விழிப்புணர்வுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தாமதியாது செயலுறுப்பெற வேண்டும். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் அதிக கரிசனை கொண்டு கபூரிய்யாவையும் அதன் வக்பு சொத்துக்களையும் அழிவிலிருந்தும் மீட்டெடுக்க வேண்டும் இதுவே சமூகத்தின் அபிலாஷையுமாகும்.


அத்­தோடு கல்­லூ­ரியில் மாண­வர்கள் வரு­டக்­க­ணக்கில் படித்­துக்­கொண்­டி­ருந்த நிலையில் அவர்­க­ளது கல்வி தற்­போது கல்­லூரி நிர்­வா­கத்­தினால் இடை நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது. 


அவர்கள் உட­ன­டி­யாக கல்­வியைத் தொடர அனு­ம­திக்க வேண்டும். மேலும் வாராந்தம் சுமார் 1000 பேர் அளவில் ஜும்ஆ தொழு­கைக்­காக பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்த கபூ­ரிய்யா பள்­ளி­வாசல் நம்­பிக்கை பொறுப்­பா­ளர்­களால் இழுத்து மூடப்­பட்­டுள்­ளது. 


சமயக் கட­மைகள் தடை செய்­யப்­பட்­டுள்­ளன. இதனை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது. எனவே முஸ்லிம் அர­சியல்வாதி­களும் சம்­பந்­தப்­பட்ட அரச நிறு­வ­னங்­களும் தூங்­கிக்­கொண்­டி­ருக்­காது விழித்தெழ வேண்டும் என்பதும் சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.


- Vidivelli -

No comments

Powered by Blogger.