Header Ads



கபூ­ரிய்யாவில் அடிப்­ப­டை­வாதம் போதிக்­கப்­பட்­டதா..? CID யின் கேள்விகளுக்கு பழைய மாணவரின் பதில்


கபூ­ரி­ய்யா அர­புக்­கல்­லூ­ரியின் நம்­பிக்­கை­யாளர் சபை அங்கு பயங்­க­ர­வாதம், அடிப்­ப­டை­வாதம் போதிக்­கப்­ப­டு­வ­தா­கவும், பாட­வி­தா­னத்தில் அடிப்­ப­டை­வாத கருத்­துகள் கொண்ட புத்­த­கங்கள் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், கிரு­லப்­பனை சி.ஐ.டி. பிரிவில் முறைப்­பாடு செய்­தி­ருந்­தது. தடை செய்­யப்­பட்ட புத்­த­கங்கள் போதிக்­கப்­ப­டு­வ­தா­கவும் முறைப்­பாட்டில் தெரி­வித்­தி­ருந்­தது.


இந்த முறைப்­பாட்­டுக்கு அமை­வாக கபூ­ரிய்யா பழைய மாணவர் சங்­கத்தின் செய­லாளர் ஐ.எல்.டில்சாட் மொஹமட் சி.ஐ.டி.யினால் விசா­ர­ணைக்கு அழைக்­கப்­பட்­டி­ருந்தார்.


பழைய மாணவர் சங்கம் கபூ­ரிய்யா அர­புக்­கல்­லூ­ரியும் அதன் சொத்­துக்­களும் தனியார் நம்­பிக்கை நிதி­யத்­துக்கு சொந்­த­மா­ன­தல்ல. அது வக்பு செய்­யப்­பட்ட சொத்­துக்கள் என வக்பு சபையில் நம்­பிக்கை பொறுப்­பாளர் சபைக்கு எதி­ராக வழக்­கொன்­றினைத் தாக்கல் செய்­த­த­னை­ய­டுத்தே கபூ­ரிய்யா நம்­பிக்கை பொறுப்­பா­ளர்­களால் பழைய மாணவர் சங்­கத்­துக்கு எதி­ராக சி.ஐ.டி.யில் முறை­பாடு செய்­யப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். பழைய மாண­வர்­சங்கம் சட்­ட­வி­ரோத குழு­வெ­னவும் முறைப்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.


பழைய மாணவர் சங்­கத்தின் செய­லாளர் டில்சாட் மொஹமட் சி.ஐ.டி. விசா­ர­ணையின் போது ‘பழைய மாணவர் சங்கம் சட்­ட­வி­ரோ­த­மான குழு­வல்ல. பயங்­க­ர­வா­தி­க­ளுடன் இச்­சங்­கத்­துக்கு எவ்­வித தொடர்பும் இல்லை. கல்­லூ­ரியில் தடை செய்­யப்­பட்ட புத்­த­கங்கள் இல்லை. பயங்­க­ர­வாதம், அடிப்­ப­டை­வாதம் போதிக்­கப்­ப­ட­வு­மில்லை. பயங்­க­ர­வாதத்­துடன் எம்மை தொடர்புபடுத்­து­வதை நாம் முழு­மை­யாக மறுக்­கின்றோம் என்று தெரி­வித்தார்.


இந்­நி­லையில் சி.ஐ.டியினர் மூன்று புத்­த­கங்­களின் போட்டோ பிர­தி­களை பழைய மாணவர் சங்­கத்தின் செய­லா­ள­ரிடம் காண்­பித்­தனர். அப்­பி­ர­திகள் கல்­லூரி நம்­பிக்கை பொறுப்­பா­ளர்­களால் சி.ஐ.டி.க்கு வழங்­கப்­பட்­ட­வை­யாகும் என டில்சாட் மொஹமட் கூறினார்.


போதிக்கப்படும் பாட நூல்கள்

இவை இமாம் இப்னு தைமி­யாவின் பத்­வாக்கள், கிதாபுத் தெளஹீத், உலூமுல் குர்ஆன் என்­ப­ன­வாகும். இப்­புத்­த­கங்கள் அடிப்­ப­டை­வா­தத்தைப் போதிப்­பன என சி.ஐ.டி.யினர் தெரி­வித்­தனர். இதற்கு மறுப்புத் தெரி­வித்த டில்சாட் மொஹமட் இது தொடர்பில் விளக்­க­ம­ளித்தார்.


இமாம் இப்னு தைமி­யாவின் பத்­வாக்கள் என்ற நூல் அறிஞர் வழங்­கிய பத்­வாக்­க­ளையே குறிக்­கி­றது. இதைப் பின்­பற்ற வேண்டும் என்­ப­தல்ல. அதே­போன்று கிதாபுத் தெளஹீத் எ-னும் நூலின் பொருள் அரபு மொழியில் கிதாப் என்­பது புத்­தகம், தெளஹீத் என்­பது ஏகத்­துவம் என்­ப­தா­கவும், உலூமுல் குர்ஆன் என்றால் கற்­ப­தற்குத் தேவை­யான அறிவு என்றும் விளக்­க­ம­ளித்தார்.


‘காபிர்­க­ளைக் ­கண்டால் .ெகால்­லுங்கள்’ என குர்­ஆனில் கூறப்­பட்­டுள்­ள­தாக ஞான­சார தேரர் முறை­யிட்­டுள்ளார். ஆனால் உலூமுல் குர்ஆன் பற்­றிய அறிவு இருந்தால் இவ்­வாறு ஞான­சா­ர­தேரர் முறை­யிட்­டி­ருக்­க­மாட்டார். இந்நூல் கட்­டாயம் படித்­துக்­கொ­டுக்­கப்­ப­ட­வேண்டும்.இக்­க­லை கட்­டாயம் அல்­குர்­ஆனை படிக்கும் ஒவ்­வொ­ரு­வரும் அறிந்­தி­ருக்க வேண்டும். இது­பற்­றிய தெளி­வின்­றியே முறைப்­பாடு செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது என்றார்.

கிதாபுத் தெளஹீத் என்ற நூல் இஸ்­லாத்தின் ஏகத்­துவ கொள்­கையை விலாவா­ரி­யாக விளக்கும் நூலாகும் என டில்சாட் மொஹமட் விளக்­க­ம­ளித்தார். அத்­தோடு இந்­நூல்கள் நாட்டின் இறை­மைக்கும், பாது­காப்­புக்கும், நல்­லி­ணக்­கத்­துக்கும் பங்கம் ஏற்­ப­டுத்தும் கருத்­துக்­களைக் கொண்­டி­ருந்தால் அது தொடர்பில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு முறைப்­பாடு செய்­யலாம் என்றும் கூறினார்.


இச்­சந்­தர்ப்­பத்தில் சி.ஐ.டி.பிரிவின் அதி­கா­ரிகள், இமாம் இப்னு தைமி­யாவின் பத்­வாக்கள் என்ற நூல் ஈரானில் தடை செய்­யப்­பட்­டுள்­ளதே என டில்சாட் முஹம்­ம­திடம் வின­வி­னார்கள். அது ஈரான் ஆட்­சி­யா­ளர்­களின் தனிப்­பிட்ட தீர்­மானம் எனத் தெரி­வித்த டில்சாட் அது தொடர்பில் ஈரான் அர­சிடம் தெளி­வு­களைப் பெற்­றுக்­கொள்­ளலாம் எனப் பதி­ல­ளித்தார்.

No comments

Powered by Blogger.