Header Ads



விமான நிலையத்திற்கு Call எடுத்த மாணவன் கைது


கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலி அழைப்பு விடுத்த 14 வயதுடைய பாடசாலை மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.


இதனை தொடர்ந்து குறித்த இளைஞன் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த மாணவர் நேற்று அவசர அழைப்புப்பிரிவுக்கு அழைப்பினை ஏற்படுத்தி விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.


இந்த அழைப்பின்படி, அதிகாரிகள் முனையத்தை சோதனை செய்தபோது, ​​​​சில நிமிடங்களில் மாணவர் மீண்டும் அழைத்து, தான் செய்தது நகைச்சுவை என்று கூறியுள்ளார்.


களுபோவில, சுனந்தராம வீதியைச் சேர்ந்த மாணவனிடம் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டதுடன், மாணவனை கடுமையாக எச்சரித்து விடுவித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.