Header Ads



தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்தது (இன்றைய நிலவரம்)


இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அதன்படி, இன்று (30) கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் “22 கரட்” ஒரு பவுன் தங்கத்தின் விலை 163,800 ரூபாவாக அதிகரித்துள்ளது.


நேற்று (29) 161,000 ரூபாவாக காணப்பட்ட “22 கரட்” ஒரு பவுன் தங்கத்தின் விலை 2,800 ரூபாவால் இவ்வாறு அதிகரித்துள்ளது.


இதனிடையே நேற்று (29) 175,000 ரூபாவாக இருந்த “24 கரட்” ஒரு பவுன் தங்கம், இன்றைய தினம் 178,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.