Header Ads



திருடர்களை பிடிக்கும் வேலைத்திட்டம் என்னிடமுள்ளது - சஜித்


கருத்துக்களாலும் சிந்தனைகளாலும் மட்டும் ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது எனவும், இந்நாட்டை கட்டியெழுப்ப ஒரு திறமையான குழு தேவை எனவும்,அத்தகைய குழு ஐக்கிய மக்கள் சக்தியிடம் இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


மொட்டுக்கோ அல்லது அதற்கு துணைபோகும் குழுக்களாலோ மக்கள் முன் செல்ல முடியாததால் தேர்தலை ஒத்திவைத்துக் கொண்டிருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


திருடர்களைப் பிடிப்பதாக வெறும் பேச்சுக்களைப் பேசுவதை விடுத்து திருடர்களை பிடிக்கும் வேலைத்திட்டம் ஐக்கிய மக்கள் சக்தியிடம் இருப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இதற்காக மேற்கொள்ள முடியுமான சகல  நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


தெமட்டகொட பிரதேசத்தில் இடம்பெற்ற வட்டார மட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.