Header Ads



மாவோவுக்குப் பிறகு 3 வது முறையாக சீன ஜனாதிபதியாகி வரலாறு படைத்தார் ஜின்பிங்


சீன அதிபர் ஷி ஜின்பிங், அந்நாட்டின் பொம்மை நாடாளுமன்றத்தில் மூன்றாவது முறையாக அதிபராகப் பதவியேற்றுள்ளார். மாவோவுக்குப் பிறகு சீன தலைவர்கள் இருமுறை மட்டுமே அதிபர் பதவியை வகித்துள்ளனர். அவருக்குப் பிறகு தற்போது ஷி ஜின்பிங் தான் மூன்றாவது முறையாக சீன அதிபர் பதவியை வகிக்கிறார்.


இந்த அதிகார பலப்படுத்துதலைத் தொடர்ந்து, 69 வயதான ஷி ஜின்பிங், சீனாவின் மிகுந்த மேலாதிக்கம் கொண்ட தலைவராக மாறியுள்ளார்.


கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராக ஷி ஜின்பிங் உள்ளதன் பின்னணியில் இருந்து அவருக்கான அதிகாரம் கிடைத்துள்ளது.


அவர் மூன்றாவது முறையாக அதிபராகப் பதவி ஏற்பார் என்பது பெரியளவில் எதிர்பார்க்கப்பட்டதுதான். வரும் நாட்களில் புதிய பிரீமியர்(பிரதமர்) மற்றும் பல்வேறு அமைச்சர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும். அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

No comments

Powered by Blogger.